Monday, June 6, 2016

Ode to #IRAIVI - ஆண் - அவன்(ம்)



My ode to the masterpiece #IRAIVI
Disclaimer: This poem contains spoilers of the movie Iraivi.
Don’t read if you haven’t seen the movie yet.
ஆண் - அவன்(ம்)

நான் ஆண்
என் பின் தான் பெண்
திரை பித்தம் கொண்ட மூத்தோன்
மோக முத்தம் கண்ட இடையோன்
தன் சித்தம் குழம்பிய கடையோன்
இவர் மொத்தம் சினங்கொண்ட பெரியோன்
அவள் வந்தாள்
குடி புகுந்தாள்
சிரித்தாள் ஒரு நாள்
பின் சினத்தை சகித்தாள்
என் ஆள் என்று பொறுத்தாள்
எந்நாளும் காத்தாள்
வாடினாள் வேண்டினாள்
மூத்தோன் தீவிர போதையால் பேதையானாள்
கடையோன் திமுரிய பார்வையால் மீதியும் போனாள்
பெரியோன் தவமுறு உளியால் இறைவியானாள்!
இடையோன் தவறிய பாதையால் பாதி ஆனாள்
சிலை செதுக்கும் உளி சதை செதுக்கலாகுமோ?
நான் ஆண் என்பான் எல்லாம் அழித்தான்
என் ஆள் என்பாள் எல்லாம் இழந்தாள்
இழந்தவள் எழுந்தாள்
கடையில் கடையோனால்
இரைவி இறைவியானாள்
- இப்படிக்கு இறைவன்

No comments: